Home Obituary திருமதி கௌரிமனோகரி பவளநாதன்

திருமதி கௌரிமனோகரி பவளநாதன்

123

திருமதி கௌரிமனோகரி பவளநாதன்
(ஆங்கில ஆசிரியை- யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி)
தோற்றம் : 23 சனவரி 1958 — மறைவு : 29 சனவரி 2017

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆங்கில ஆசிரியை கௌரிமனோகரி பவளநாதன் அவர்கள் 29- 01- 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.


யாழ். திருநெல்வேலி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கௌரிமனோகரி பவளநாதன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை பவளநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

லவகாந்த்(அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர், நல்லூர் பிரதேச செயலகம்), கோபிநாத்(லண்டன்), செந்தூர்காந்(யாழ். பல்கலைக் கழகம் வணிகபீடம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தணிகாசலம், தவராஜா, திலகவதி, சத்தியலிங்கம், நந்தகுமார்(பிரான்ஸ்), பத்மநிதி, கலாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அதீபா(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரி, கனகேஸ்வரி, செல்வராசா, தேவகுலசிங்கம், பாலகௌரி, சாரதாதேவி, இந்திராணி, தபோநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கனகரத்தினம், பொன்னுத்துரை(பொறியியலாளர்), மற்றும் கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(ஆசிரியை- வேம்படி மகளிர் கல்லூரி), பொற்கொடி(கனடா), இராசபாக்கியம் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

றிஷ்விகன் அவர்களின்  பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்ய பி.ப 03:00 மணிக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அம்மன் வீதி,
பத்திரகாளி கோவிலடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

Previous articleVasantham 2014
Next articleMr.E.Chelliah 1910-1026